Saturday, February 16, 2013

பாட வந்ததோர் கானம்




பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை
தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ

ராஜமாலை தோள் சேரும்
நாணமென்னும் தேன் ஊறும்
கண்ணில் குளிர்காலம்
நெஞ்சில் வெயில்காலம்
அன்பே எந்நாளும் நான் உந்தன் தோழி
பண்பாடி கண்மூடி
உனது மடியில் உறங்கும் ஒரு கிளி


மூடிவைத்த பூந்தோப்பு
காலம் யாவும் நீ காப்பு
இதயம் உறங்காது
இமைகள் இறங்காது
தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூறும்
நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்









படம்: இளமை காலங்கள் (1983)
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: P. சுசீலா, கே.ஜே.யேசுதாஸ்

1 Comment:

கோமதி அரசு said...

இனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றி.

Last 25 songs posted in Thenkinnam