ஒரு நாள் அந்த ஒரு நாள்
உன்னை முதலில் கண்ட அந்த திருநாள்
அது மறந்து போகுமா
கனவா வெறும் கதையா
இளநெஞ்சை வருடும் நல்ல இசையா
அது கரைந்து போகுமா
உன் நினைவு தழுவி இருந்தேன்
அந்த உறக்கம் தழுவ மறந்தேன்
நீ அறிவாயோ
உனைப் பார்க்க அன்று பிறந்தேன்
அதனால் இறக்க மறந்துபோனேன்
நீ அறிவாயோ
காலம் காலம் கடத்தலாம் காதல் சாகாது
வாழ்வின் எல்லை மீறலாம் எதுதான் ஆகாது
மயக்கங்கள் மறக்க மடியொன்று வேண்டும்
மறுக்கவேண்டாம் என் அன்பே
மறுபடி பிறக்க மது கொஞ்சம் வேண்டும்
தடுக்க வேண்டாம் என் அன்பே
தனிமை தாகம் தணிந்தாக வேண்டும் சபதம் காப்பேன்
கைகள் உறவில் கலந்தாட வேண்டும் கரும்பின் உற்றே
ஏழு புவனம் வென்று வந்தேன்
நான் உன் முன்னே தோல்விதான் கண்டேன்
அருகினில் அன்று உனைக் கண்ட போது
தூர தூரம் நின்றேன்
நீண்ட தூரம் நீ சென்ற போதும்
உந்தன் அருகே இருந்தேன்
காதல் உலகில் மேற்கோடு வெளிச்சம் போவதில்லை
காதல் கணக்கில் காலங்கள் நாளை முடிப்பதில்லை
கனவு தேடும் கனவு வேண்டாம்
நம் உண்மையின் ராகங்கள் வேண்டும்
படம்: தேவதை
இசை: இளையராஜா
பாடல்: அறிவுமதி
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, இளையராஜா
0 Comments:
Post a Comment