Friday, February 8, 2013

தாவித் தாவி போகும் மேகம்

தாவித் தாவி - திரைப்பாடல்.காம்

தாவித் தாவி போகும் மேகம் பொழியும் நேரம்
காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்

அந்த நீர்மேகம் எங்கு போனாலும்
உந்தன் பின்னால் என்றும் துணையாய் இங்கு தொடராதோ!

விளையாடும் மைதானம்
அங்கு பலமாய் கரகோஷம்
வெறும் பந்தாய் நாமிருந்தால்
பல கால்கள் விளையாடும்
நாளை என்ன ஆகுமென்று அறியாமல்
காலை மாலை வேளை தோறும் தூங்காமல்
அதிகால நேரத்தில் புது வெளிச்சம் தூரத்தில்
என்னருகில் வந்து என்னைத் தொட்டு தழுவ


கடலலைகள் நிரந்தரமா?
அவை ஒவ்வொன்றும் புதிது
அதில் குமிழாய் நுரைகளுமாய்
வரும் கவலை உடைகிறது
எந்த காற்று தீண்டுமென்றா குழல் தேடும்?
எந்த காற்று நுழைந்தாலும் புது இசை பாடும்
நாம் வாழும் காலத்தில் அட யாரும் தனியில்லை
உன் தனிமை தன்னை தனிமையாக்கும் துணைகள்


படம்: தோனி
இசை: இளையராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: இளையராஜா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam