மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தேதான் திரிவான்
தலை தொடும் அலையென எழுந்திடுவான்
நெஞ்சில் அணைத்திடும் மழையென நனைத்திடுவான்
பயம் மூளும் நேரம் தரை வந்து காப்பான்
துயர் கொண்ட பேரை கரை கொண்டு சேர்ப்பான்
கடமை முடிந்தால் பறந்திடுவான் பாவி
இவளின் துயரம் மறந்திடுவான்
அவனோடிவள் இதயம் தொலையும்
தனிமைத் தெருவில்
இவளோடவன் நிழலும் அலையும்
எழுநூறு கோடி முகம் இங்கு உண்டு
அழகான ஒன்றை எவர் கண்டதுண்டு
மனதோர் உருவம் வரைகிறதே காற்றில்
கனவாய் அதுவும் கரைகிறதே
கொடுமை அதில் கொடுமை எதுவோ
விழிகள் இருந்தும்
உனைக் காண முடியாததுவோ
படம்: முகமூடி
இசை: கே
பாடல்: மதன் கார்க்கி
பாடியவர்: சின்மயி
0 Comments:
Post a Comment