Sunday, February 3, 2013

கம்பன் எங்கு போனான்



கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

லைலா செத்து போனாள் மஜ்னு செத்து போனான்
நம்மை பாராமல்

கண்ணீரே இல்லாத காதல் சூத்திரம்

கண்டோமே கண்டோமே நாங்கள் மாத்திரம்

இது ஒரு புது முறை இதில் என்ன வரைமுறை
வருகிற தலைமுறை வணங்கட்டும் இருவரை
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

இது கையில் கட்டிய தாலி
பலர் கழுத்தில் உள்ளது போலி
இந்த குறுகிய வட்டம் இனி சரி வருமா
உங்கள் கோட்டுக்குள் மழை பெய்யுமா

அணை விட்டு தாவிய வெள்ளம்
இது கட்டுக் காவலை வெல்லும்
உங்கள் விதிகளும் சதிகளும் நிரந்தரமா
இது விலங்கிட்ட சுதந்திரமா

எங்கள் பேரை யாரும் கேட்டால் புர்ர்ர் என்போம்

எங்களுக்குள்ளே என்ன உறவென்றால் புர்ர்ர் என்போம்

விலங்குகள் தடை இல்லை விதிகளும் தடை இல்லை
மரபுகள் தடை இல்லை மனிதரும் தடை இல்லை
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

இது யுத்தம் இளமையின் யுத்தம்
இனி துச்சம் உறவுகள் துச்சம்
உங்கள் கட்டு திட்டம் சட்ட திட்டம் தள்ளி வையுங்கள்
இல்லை கடலுக்குள் தள்ளி விடுங்கள்

அட புத்தம் புதியது சொந்தம்
இது முத்தம் எழுதிய பந்தம்
இனி இளையவர் எங்களுக்கு குரல் கொடுங்கள்
அட பழையவர் வழி விடுங்கள்

காதலை தடுத்தவர் கதை என்ன ஆனது புர்ர்ர் தானே

கை கொண்ட விலங்கும் நாங்கள் நினைத்தால் புர்ர்ர் தானே

நினைப்பது நடக்கணும் இது எங்கள் இலக்கணம்
இனி வரும் தலைமுறை இதை மட்டும் படிக்கணும்
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

லைலா செத்துப் போனாள் மஜ்னு செத்துப் போனான்
நம்மை பாராமல்

கண்ணீரே இல்லாத காதல் சூத்திரம்

கண்டோமே கண்டோமே நாங்கள் மாத்திரம்

இது ஒரு புது முறை இதில் என்ன வரைமுறை
வருகிற தலைமுறை வணங்கட்டும் இருவரை
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

படம் : ஜாதி மல்லி (1993)
இசை : மரகதமணி 
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம் , சித்ரா
வரிகள் : வைரமுத்து

1 Comment:

Anonymous said...

இனிமையான பாடல் பகிர்விற்கு நன்றி.

Last 25 songs posted in Thenkinnam