Wednesday, February 6, 2013

மூன்று பேர் மூன்று காதல் - ஸ்டாப் த பாட்டு




ஸ்டாப்  த பாட்டு ஸ்டாப்  த பாட்டு
இந்த பாட்டு வேணாம் தலைவா
ப்ர்ஸ்டு லவ்வு நெனப்பு வருதே
இந்த பாட்டு வேணாம் தலைவா
என்னமோ ஆறேன் இந்த பாட்டால தான்
அவள தான் தேடி கண்ண மூடி இது போக சொல்லுதே

விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல

ராத்திரி தூக்கத்தில் கேட்கையில் கண்ணீர் வருதே
ராட்டினம் போல் அவள் காதலை சுற்றி விடுதே
சந்தோஷம் என்பேனா சோகங்கள் என்பேனா
என்னாளும் நீங்காத ஏக்கம் இது
சங்கீதம் போல இந்த மண் மீது வேறெது
சட்டென்று ஈர்கின்ற பாட்டு இது
சிரித்தேன் அழுதேன் இந்த பாட்டில் கரைந்தே போனேன்

விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல

யார் அவன் ராகத்தில் சோகத்தை மீட்டி சொன்னான்
யார் அவன் என் மனம் நினைப்பதை பாட்டில் சொன்னான்
சந்தேகம் இல்லாமல் என் வாழ்வை யாரோ தான்
எட்டி தான் பார்க்கின்ற மாயம் இது
முன்னாடி போனாலும் பின்னாடி போனாலும்
எங்கேயும் கேட்கின்ற கானம் இது
புதிதாய் பிறந்தேன் இந்த பாட்டில் தொலைந்தே போனேன்

விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல

ஸ்டாப்  த பாட்டு ஸ்டாப்  த பாட்டு
இந்த பாட்டு வேணாம் தலைவா
ப்ர்ஸ்டு லவ்வு நினைப்பு வருதே
இந்த பாட்டு வேணாம் தலைவா

விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல

படம் : மூன்று பேர் மூன்று காதல் (2013)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : ரமேஷ் விநாயகம்
வரிகள் : நா. முத்துக்குமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam