Thursday, February 28, 2013

கண்ணில் அன்பை சொல்வாளே



கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே

கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் மௌனத்தினாலே மனதை சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவாள்

கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே

உலகம் எந்தன் உலகம் எங்கும் இவளே வந்திடுவாள்
உயரம் கொஞ்சம் வளர்ந்த போதும் குழந்தை என்றிடுவாள்
உள்ளங்கையில் பாசம் வைத்து உணவை தந்திடுவாள்
உறங்கும் போதும் உறங்காமல் என் அருகில் நின்றிடுவாள்
இவள் போலே இவளை போலே வாழ்வில் நண்பர்கள் இல்லை
மறுஜென்மம் வந்தால் கூட நான் தான் இவளின் பிள்ளை
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்

கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே

கண்ணீர் துளிகள் வேண்டும் என்று கண்ணை கேட்கின்றேன்
கண்ணீர் துடைக்க இவளும் வந்தால் தினமும் அழுகின்றேன்
என்னை நானே காண்பது போலே இவளை பார்க்கின்றேன்
என்றும் எங்கும் வழித்துணையாக இவளை கேட்கின்றேன்
உறவேன்னும் வார்த்தைக்கு தான் அர்த்தம் இங்கே கண்டேன்
இவள் அன்பின் வெளிச்சம் என்மேல் இரவும் பகல் தான் என்பேன்
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்

கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் மௌனத்தினாலே மனதை சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவாள்

கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே

படம் : ஈசன்(2010) 
இசை : ஜேம்ஸ் வசந்தன் 
பாடியவர் : பத்மநாபன்
வரிகள் : நா. முத்துக்குமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam