Sunday, August 17, 2008

652.மலர்களே மலர்களே மலரவேண்டாம்



மலர்களே மலர்களே மலரவேண்டாம்
உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை
ஓய்வெடுங்கள்
இன்று தோழனை அழைத்துவந்து
தேனை விருந்து கொடுத்துவிட்டு
வம்பு செய்திகள் சுவைத்துக்கொண்டு
சிரித்து முறைத்து
விருப்பம்போல வாழும் (மலர்களே)

ஆடைகள் சுமைதானே
அதை முழுதும் நீக்கிவிட்டு குளிப்பேன்
யாவரேனும் பார்ப்பார்கள் என்ற
கவலையேதுமின்றி களிப்பேன்
குழந்தையென மீண்டுமாறும் ஆசை
எல்லோர்க்கும் இருக்கிறதே

சிறந்த சில நொடிகள் - வாழ்ந்துவிட்டேன்
என்னுள்ளம் சொல்கிறதே
அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே
அட இங்கு பணிப்பெண்கள் யாருமில்லையே
இந்த விடுதலைக்கிணையின்று ஏதுமில்லையே
அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி ( மலர்களே)

நீரோடு ஒரு காதல்
கடலையில் கால் நனைய நடப்பேன்
ஆகாயம் என்னைப்பார்க்க
மணல் வெளியில் நாள்முழுதும் கிடப்பேன்
புதியபல பறவைக்கூட்டம் வானில்
பறந்து போகிறதே
சிறகு சில உதிர்த்து நீயுமாவாய்
என்றே தான் அழைக்கிறதே
முகத்துக்கு ஒப்பனைகள் தேவையில்லயே
முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலையில்லையே
அசடுகள் வழிந்தி்ட ஆண்கள் இல்லையே
காலம் நேரம் கடந்த
ஞான நிலை.. (மலர்களே)
பாடலை விரும்பிக்கேட்டவர் ரம்யாரமணி
பாடலைப்பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
பாடலுக்கு இசையமைத்தவர்: யுவன்சங்கர்
திரைப்படம் : புதுக்கோட்டையிலிருந்து சரவணன்
பாடல் வரிகள் : தாமரை

2 Comments:

Ramya Ramani said...

என் விருப்ப பாடலை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உண்மையில் நீங்க கேட்டபின்புதான் நான் இந்த பாடல் வரிகள் தாமரையோடது என்று அறிந்து கொண்டேன்.. தாமரை ஜெயஸ்ரீ கூட்டணி ன்னாலே கலக்கல் தானே ரம்யாரமணி

Last 25 songs posted in Thenkinnam