Tuesday, August 19, 2008

653.தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்

தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளைமையின் நினைவுகள் பறந்தது

ஹோ நெஞ்சமே உன்னிடம் இன்று தான் மாற்றமே
கல்லான நெஞ்சங்கள் கூட இளம் பெண்ணாலே பூவாக மாறும்
இனி நான் காணும் இன்பங்கள்
ஆறு போல ஓடவேண்டும்(தனிமையிலே )

என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே(2)
என் உள்ளப் பொன்வாசல் தேடி
இசை காற்றாக என்னோடு கூடி
புது ஊற்றாக இன்பங்கள்
ஊர வேண்டும் சேரவேண்டும்(தனிமையிலே )

ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே (2)
எண்ணாத இன்பங்கள் யாவும் இனி என்னாளும் உன்னோடு வாழும்
பனி நீராட்டும் இந்நேரம்
பாடவேண்டும் கூட வேண்டும்(தனிமையிலே)

Thanimaiyele - S.N.Surendar&Janaki

பாடலைப்பாடியவர்கள் : SNசுரேந்தர் , ஜானகி
திரைப்படம்: சட்டம் ஒரு இருட்டறை
இசையமைத்தவர்கள் : சங்கர் கணேஷ்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam