Tuesday, June 1, 2010

கப்பேலேறி போயாச்சு



கப்பேலேறி போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்ட நடு ராவாச்சு
நட்டை விதை பூவாச்சு பொன்னம்மா
விடியும் வரையும் போராடினோம்
உதிரம் நதியாய் நீராடினோம்
வெட்கமெல்லாம் வாலாச்சு
துக்கமெல்லாம் தூளாச்சு கண்ணம்மா கண்ணம்மா

நம்ம வாசல் தேடி சாரல் வரும்
எதிர் வானம் தூவும் தூரல் வரும்
வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும் இப்ப
(கப்பலேறி..)

வண்ண மான் வஞ்சை மான் நேர்க்கோலம்
கண்களை கன்னத்தில் போட
இன்னுமா இன்னுமா போர்க்கோலம்
இன்று நீ அங்குதான் போராட
உனை கேட்டா என் நெஞ்சை அள்ளிக்கொடுத்தேன்
தினம் நாந்தான் என் அன்பே முள்ளில் படுத்தேன்
நானோ தீவா
ஆனேன் வா வா அம்மம்மா நாளெல்லாம்
காணல் நீரை குடித்தேன் இப்ப
(கப்பேலேறி..)

அன்னமே அன்னமே நான் சொல்லி
வந்ததா தென்றலும் நேற்று
உன்னையே உன்னையே நான் எண்ணி
வெந்ததை சொன்னதா பூங்காற்று
உந்தல் காலில் மெட்டி போல் கூட இருப்பேன்
உந்தன் கண்ணுக்கு கண்ணீர் போல் காவல் இருப்பேன்
மாலை சூடி தோழி ஆடி
கை தொட்டு மெய் தொட்டு
உன்னி என்னை கரைப்பேன்
(கப்பேலேறி..)

படம்: இந்தியன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், P சுசீலா
வரிகள்: வாலி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam