Thursday, June 10, 2010

திலோத்தம்மா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஒரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ திலோத்தம்மா
இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ திலோத்தம்மா
ஆயிரம் கனவுகள் அம்மம்மா தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும் கலைபவன் நானம்மா

இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே என்ன என்ன என்ன என்ன
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே என்ன
இரவு இப்போது நீளம் ஆனதே என்ன என்ன என்ன என்ன
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே என்ன
எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே என்ன என்ன என்ன என்ன
என் பேர் இப்போது மறந்து போனதே என்ன
வானம் இப்போது பக்கம் வந்ததே என்ன என்ன என்ன என்ன
பூக்கள் உன்னாலே தூரம் ஆனதே என்ன
ஓஹோ ஒரு காதலினிலே நதி கலந்த பின்னே அது பிரிவதில்லை
ஓஹோ ஒரு கவிதையிலே வந்து கலந்த பின்னே சொல்லும் அறிவதில்லை
(ஒரு முறை...)

காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே இல்லை இல்லை இல்லை இல்லை
காதல் கொல்லாத ஜீவன் பூமியில் இல்லை
கண்கள் இல்லாமல் காட்சி என்பதே இல்லை இல்லை இல்லை இல்லை
கரையே இல்லாமல் நிலவு என்பதே இல்லை
தண்ணீர் இல்லாமல் எந்த மீனும் இல்லை இல்லை இல்லை இல்லை
தலைவி இல்லாமல் காடல் காவியம் இல்லை
மண்ணை தொடாத மழையும் வானிலே இல்லை இல்லை இல்லை இல்லை
உன்னை தொடாத உறவு என்பதும் இல்லை
ஓஹோ இந்த இயற்கையெல்லாம் நம் இருவரையும் கண்டு பலித்ததென்ன
ஓஹோ இது காதலுக்கு உள்ல ஜீவ குணம் இதில் கலக்கமென்ன
(ஒரு முறை..)

படம்: ஆசை
இசை: தேவா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா
வரிகள்: வைரமுத்து

1 Comment:

சீனு said...

//ஓஹோ ஒரு காதலினிலே நதி கலந்த பின்னே அது பிரிவதில்லை//

ஓஹோ ஒரு கடலினிலே நதி கலந்த பின்னே அது பிரிவதில்லை

Please check.

Last 25 songs posted in Thenkinnam