Thursday, June 24, 2010

நான் பார்த்த ரதிதேவி எங்கே



நான் பார்த்த ரதிதேவி எங்கே
நான் கேட்ட புதுப்பாடல் எங்கே
பொன்மாலை சூட நான் வந்த நேரம்
பெண்ணே நீ சிலையானதேன்
என் கண்ணே நீ கதையானதேன்
நான் பார்த்த ரதிதேவி எங்கே
நான் கேட்ட புதுப்பாடல் எங்கே

பூமலர் சேலையை நான் கொடுத்தேன்
பூவுடல் போர்த்தவா நீ நினைத்தாய்
பூமலர் சேலையை நான் கொடுத்தேன்
பூவுடல் போர்த்தவா நீ நினைத்தாய்
மூடிய உன் இமை பாடுமோ
உன் கண் என்னுடன் பேசுமோ

நான் பார்த்த ரதிதேவி எங்கே
நான் கேட்ட புதுப்பாடல் எங்கே

என்னையும் உன்னையும் ஏன் பிரித்தார்
இடையினில் கோடுகள் ஏன் கிழித்தார்
கனவுகள் புகையென ஆனதேன்
காற்றில் சேர்ந்தே போனதேன்

நான் பார்த்த ரதிதேவி எங்கே
நான் கேட்ட புதுப்பாடல் எங்கே

மரங்களும் இலைகளும் வாடுவதேன்
மலர்களும் நிறங்களை இழந்தது ஏன்
தாளமும் ராகமும் ஏங்கவே
ஜல் ஜல் ஜல் ஒலி நின்றதே

நான் பார்த்த ரதிதேவி எங்கே
நான் கேட்ட புதுப்பாடல் எங்கே
பொன்மாலை சூட நான் வந்த நேரம்
பெண்ணே நீ சிலையானதேன்
என் கண்ணே நீ கதையானதேன்

படம்: கண்ணில் தெரியும் கதைகள்
இசை: ஜி.கே.வெங்கடேஷ்
பாடியவர்: ஏ.எல்.ராகவன்

விரும்பி கேட்டவர்: மணி வேலன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam