Saturday, November 10, 2012

ஆளான நாள் முதலா



மச்சான் ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல
மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்
வேணான்னு சொல்லுறீங்களே  சும்மா வெறும் வாயை மெல்லுறீங்களே
ஆடியிலே கட்டிக்கிட்டா சித்திரைக்கு புள்ள வரும்
ஆகாது ஆகாது மச்சானே இது தோதான தை மாசம் வச்சானே
ஆகாது ஆகாது மச்சானே இது தோதான தை மாசம் வச்சானே

உன்னை நான் கட்டிக் கொள்ள எப்பவும் நெனச்சதில்லை
கல்ல கட்டி தண்ணிக்குள்ள முங்குனவன் யாருமில்ல
வேணாண்டி விட்டு விடுடி
நான் தவிச்சாக்கா தண்ணி குடுடி
தாலி கட்டி கூடிக்கிட்டா சாமி குத்தம் ஆகுமின்னு
மேலூரு குறிக்காரன் சொன்னாண்டி
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி
மேலூரு குறிகாரன் சொன்னாண்டி
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி

ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல
மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்

புல்லறுக்க போகையில புள்ளக்குடி தண்ணியில
உன் முகத்தை பார்த்து புட்டேன் ஓடி வந்து சேர்ந்து புட்டேன்
என் பாசம் தெரியாது மாமா இது அனுமாரு நெஞ்சில்ல ராமா
என் பாசம் தெரியாது மாமா இது அனுமாரு நெஞ்சில்ல ராமா

கொல்லையில மாங்காய் மரம்  கொத்து கொத்தாய் காய்ச்சிருக்கு
காவல்காரன் தூங்கயில கை அரிச்சு மாம்பழத்தை
அறியாம பறிச்சா தான் இனிக்கும்
அடி அதுக்குள்ளே கடிச்சா தான் ருசிக்கும்
அறியாம பறிச்சா தான் இனிக்கும்
அடி அதுக்குள்ளே கடிச்சா தான் ருசிக்கும்

பூ எடுத்து மாலை கட்டி ராசா
நான் கூடு கட்டி குடியிருக்கேன் ராசா
உன்னை நெனச்சே பொறந்தேன் வளந்தேன் ராசா என் ராசா

யம்மா உன்னை நான் கட்டிகிட எப்பவும் நெனச்சதில்லை
கல்ல கட்டி தண்ணிக்குள்ள முங்குனவன் யாருமில்ல

காள கண்ணு வாங்கி கட்டி பால் கறக்க ஆசைப்பட்ட
கோழி குஞ்சு குட்டி போட கோயிலுக்கு நேந்திக்கிட்ட
முட்டாளா இருக்கேடி மானே அடி ஒட்டாது என் வாழ்க்கை தானே
ரொம்ப முட்டாளா இருக்கேடி மானே அடி ஒட்டாது என் வாழ்க்கை தானே

ஒத்தைக்கொத்தை சண்டையினா ஓடி போற ஆம்பளை நீ
செத்து போன பாம்பை பார்த்து சத்தம் போட்ட வீரனும் நீ
நீ மட்டும் சரிதானா மாமா என் நெனப்பதான் நீ பாரு மாமா
நீ மட்டும் சரிதானா மாமா என் நெனப்பதான் நீ பாரு மாமா

உன் வாயை கொஞ்சம் மூடிக்கடி வாரேன்
நான் ஆம்பளை தான் வீரத்தை நீ பாரேன்
நான் நெனச்சா மலையை ஒடிப்பேன்
வாரேன் நான் வாரேன்

மச்சான் ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல
உன்னை நான் கட்டிக் கொள்ள எப்பவும் நெனச்சதில்லை
வேணான்னு சொல்லுறீங்களே
அடி வேணாண்டி விட்டு விடுடி
தாலி கட்டி கூடிக்கிட்ட சாமி குத்தம் ஆகுமடி
ஆகாது ஆகாது மச்சானே
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி
ஆகாது ஆகாது மச்சானே
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி

படம் : காதல் கவிதை (1998)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : புஷ்பவனம் குப்புசாமி, சங்கீதா
வரிகள் : அகத்தியன்

1 Comment:

Anonymous said...

adi anir (anil) pillai kadichaa thaan rusikkum

[it's said that fruits like koiya (guava) are tasty if they have been bitten by squirrels (anil)]

--kgp07nss-

Last 25 songs posted in Thenkinnam