Wednesday, November 7, 2012

கண்ணே தொட்டுக்கவா


கண்ணே தொட்டுக்கவா கட்டிக்கவா
கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா
தொட்டுக்கிட்டா பத்திக்குமே
பத்திக்கிட்டா பத்தட்டுமே
அஞ்சுகமே நெஞ்சு என்னை விட்டு விட்டு துடிக்குது
கட்டழகி ஒன்ன எண்ணி கண்ணு முழி பிதுங்குது
கொத்தி விட வேண்டுமென்று கொக்கு என்ன துடிக்குது
தப்பி விட வேண்டுமென்று கெண்டை மீனு தவிக்குது
குளிக்கிற மீனுக்கு குளிர் என்ன அடிக்குது
பசி தாங்குமா இளமை இனி
பரிமாற வா இள மாங்கனி

வனிதாவனி வன மோகினி வந்தாடு
கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு
உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே தக்க திமி தாளமடி
உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே தக்க திமி தாளமடி
வந்து ஆடடி
வனிதாவனி ஹ வனமோகினி வந்தாடு
கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு

அணைத்தவன் எனக்குள்ளே குளித்தவன்
சுவைத்தவள் உயிர் வரை இனித்தவள்
இதயம் ததீம் ததீம் ததீம் போடாதோ
இளமை தந்தோம் தந்தோம் என்றே பாடாதோ
விடியும் வரை மழையோ மழை உன் கலையே கலை கண்ணா
கலையின் வகை அறியும் வரை உடையே பகை கண்ணே
கொஞ்சினாலும் மிஞ்சினாலும் கோடு தாண்டாதே
வனிதாவனி ஹ வன மோகினி வந்தாடு
கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு

விடிந்தது நிறம் என்ன வெளுத்தது
இரவினில் மன்னன் வந்து வெளுத்தது
இரவில் ச்சம் ச்சம் ச்சம் போதாதோ
பகலில் மிச்சம் மிச்சம் மிச்சம் வாராதோ
இரவொரு விதம் பகலொரு விதம் பருவம் பதம் கண்டேன்
சுகமோ சுகம் தினமொரு ரகம் இதுவே இதம் என்பேன்
நான் தொடாத பாகம் தன்னை தென்றல் தீண்டாது
வனிதாவனி ஹ வன மோகினி வந்தாடு
கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு

உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே தக்க திமி தாளமடி
உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே தக்க திமி தாளமடி
வந்து ஆடடி
வனிதாவனி ஹ வனமோகினி வந்தாடு
கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு

படம் : விக்ரம் (1986)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கமல்ஹாசன், பாலசுப்ரமணியம், ஜானகி
வரிகள் : வைரமுத்து

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam