Wednesday, November 14, 2012

மாங்குயிலே பூங்குயிலே



மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு
முத்து முத்து கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு

தொட்டு தொட்டு வெளக்கி வச்ச வெங்கலத்து செம்பு
அத தொட்டெடுத்து தலையில் வெச்சா பொங்குதடி தெம்பு
பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு
இப்போ கிட்ட வந்து கெளருதடி என்ன படு ஜோரு
கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா பொண்ணு மனசே தொட்டு பறிச்சா
தன்னந்தனியா எண்ணி ரசிச்சா கண்ணு வல தான் விட்டு விரிச்சா
ஏறெடுத்து பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து
சீரெடுத்து வாரேன் யம்மா சேத்து என்னை தேத்து
முத்தையன் படிக்கும் முத்திர கவிக்கு நிச்சயம் பதிலு சொல்லணும் மயிலு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு

ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன்
யம்மா கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரியேன்
வங்கத்திலே வெளஞ்ச மஞ்சக் கெழங்கெடுத்து ஒரசி
யம்மா இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி
கூடியிருப்போம் கூண்டுக் கிளியே கொஞ்சி கெடப்போம் வாடி வெளியே
ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன் சம்மதமுன்னு சொல்லு கிளியே
சாமத்திலே வாரேன் யம்மா சாமந்திப்பூ தாரேன்
கோபப்பட்டு பாத்தா யம்மா வந்த வழி போறேன்
சந்தனம் கரைச்சு பூசனும் எனக்கு முத்தையங் கணக்கு மொத்தமும் ஒனக்கு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு
முத்து முத்து கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

படம் : கரகாட்டக்காரன் (1990)
இசை : இளையராஜா
பாடியவர் : பாலசுப்ரமணியம்
வரிகள் : கங்கை அமரன்

1 Comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சக்கைபோடு போட்ட பாடல்...

நன்றி...

Last 25 songs posted in Thenkinnam