Saturday, November 17, 2012

துப்பாக்கி - வெண்ணிலவே தரையில்



வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்

வெண்ணிலவே விழியில் பிடித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்

அழகே நீ ஓர் பூகம்பம் தானா அருகே வந்தால் பூக்கம்பம் தானா
அழகே நீ ஓர் பூகம்பம் தானா அருகே வந்தால் பூகம்பம் தானா
தீயா நீரா தீராத மயக்கம்
தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும்
அணைத்திட எறிந்திடும் பெண் தேகம் அதிசயம்

வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்

ஒரு நாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய்
மறுநாள் என்னை கண்டேனே புதிதாய்
விழிகள் மீனா தூண்டில்கள் என்பேன்
விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன்
நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழை  வரும்

வெண்ணிலவே விழியில் பிடித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்

படம் : துப்பாக்கி (2012)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிஹரன், பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள் : நா. முத்துக்குமார்

1 Comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

பாடல் வரிகளுக்கு நன்றி...

Last 25 songs posted in Thenkinnam