Tuesday, November 24, 2009

காவலர் குடியிருப்பு - உயிரே என் உயிரில் வந்தாய்



உயிரே என் உயிரில் வந்தாய்
உயிருக்கு உயிரைத் தந்தாய்
யாரோடும் பேசாமல் எங்கேயும் போகாமல்
உன் பாதைப் பார்த்தேனே
இதயத்தில் ஏதோ செய்தாய்
இது தானே காதல் என்றாய்
கடிகாரம் பார்க்காமல்
நொடி நேரம் தூங்காமல்
உன்னைத்தான் கேட்டேனே

சிரிக்கிறேன் தவிக்கிறேன் கனவில் வாழ்கிறேன்
காதல் தீண்டித் துடிக்கிறேன் கொதிக்கிறேன்
தொலைந்து போகிறேன் உன்னுள் நானே

கண்ணாடிப் பார்க்கும்போதும் கை வீசி போகும்போதும்
உன் பேரைச் சொல்லிச் சொல்லிப்பார்த்தேன்
காதோடு ஏதோப்பாட காற்றோடு கேட்கும்போதும்
உன் காதல் எண்ணித்தானே கேட்பேன்
உனகருகே நான் இருந்தால் இரு விழி கோலம் போடும்
பகல் இரவின் பொழுது எல்லாம் திருவிழாக்கோளமாகும்
இது நிஜமா இது கனவா உனை நினைக்காத நாளே இல்லை
(சிரிக்கிறேன்..)

உன்னோடுப் போகும்போதும் என் சாலை ஓரம் மீது
எங்கெங்கும் பூக்கள் பூக்க பார்த்தேன்
உன் கைகள் தீண்டும் போது உன் பார்வைத் தாண்டும்
என் பெண்மை ஏதோ ஆகக் கண்டேன்
நினவுகளால் நினைவுகளால் தடம் புரண்டோடும் போதை
நெருக்கத்தினால் நெருக்கத்தினால் எனை தொலைந்தாலே ராதை
இது நிஜமா இது கனவா உனை நினைக்காத நாளே இல்லை
(உயிரே..)

படம்: காவலர் குடியிருப்பு
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்: சின்மயி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam