Monday, November 16, 2009

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென
தென்றலாக நீ வருவாயா
ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா
மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா
பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா
கவிதை ஆகிறேன்

நீ வருவாயென நீ வருவாயென

பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென

கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள்
உனக்கென தினம்தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென
வாசகனாகிவிட்டேன்
கவிதை நூலோடு கோலப் புத்தகம்
உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம்
தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவெனக் கரைந்தாலும்
என் வாசல் பார்க்கிறேன்

நீ வருவாயென நீ வருவாயென (பார்த்து)


எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும்
நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட
கவிதைக்கும் கால்களில்லை
உலகில் பெண்வர்க்கம் நூறு கோடியாம்
அதிலே நீ யாரடி
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்
எங்கே உன் காலடி
மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து
இரு விழிகள் தேய்கிறேன்

நீ வருவாயென நீ வருவாயென

(பார்த்து)


பாடலைப்பாடியவர் : எஸ்.பி.பி
இசை : எஸ் . ஏ ராஜ்குமார்
படம் : நீ வருவாயென

1 Comment:

சென்ஷி said...

அருமையான பாடல் அக்கா... பதிந்தமைக்கு மிக்க நன்றி!

Last 25 songs posted in Thenkinnam