Monday, November 2, 2009

ஆதவன் - வாராயோ வாராயோ

பதிவர் “நான் ஆதவன்” சூர்யாவுக்கு பிறந்தநாள் அதற்காக சூர்யாவின் ஆதவன் படத்திலிருந்து தேன்கிண்ணத்தில் இப்பாடல் ஒலிக்கிறது. சூர்யா என்கிற நான் ஆதவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


Get Your Own Hindi Songs Player at Music Plugin

வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே

வாராயோ வாராயோ மோனாலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா ஆ தினமே

இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான்
உன்கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன்தான்
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்

ஓலைலைலைலை காதல் லீலை
செய்செய்செய்செய் காலை மாலை
உன் சிலை அழகை
விழிகளால் நான் வியந்தேன்
இவனொடு சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா

(வாராயோ வாராயோ காதல் கொள்ள)

நீயே நீயே அந்த ஜூலியத்தின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக்குளிப்பாயே

நீ நீ நீ மை ஃபேர் லேடி
வாவா என் காதல் ஜோடி
நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ



(வாராயோ வாராயோ மோனாலிஸா)

பாடல் இயற்றியவர் : கபிலன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
திரைப்படம்: ஆதவன்
பாடியவர்கள்: சின்மயி,மேகா, உன்னிக்கிருஷ்ணன்

4 Comments:

சென்ஷி said...

ஆதவனுக்கு பொறந்த நாள் வாழ்த்துக்கள்!

MyFriend said...

வாழ்த்துக்கள் ஆதவா..

முத்துக்கா, மேட்சிங் சாங். ;-)

ஆயில்யன் said...

ஆதவனுக்கு பொறந்த நாள் வாழ்த்துக்கள்!

முத்துக்கா, மேட்சிங் சாங். ;-)

☀நான் ஆதவன்☀ said...

மேட்சிங் சாங் இட்ட முத்தக்காவிற்கு ஸ்பெஷல் நன்றி. வாழ்த்து சொன்ன சென்ஷி. ஃமை ஃபிரண்ட், ஆயில்ஸ் எல்லாருக்கும் நன்றிகள் :)

Last 25 songs posted in Thenkinnam