Sunday, September 13, 2009

ஒரு நாள் உனை விழிகள் பார்க்க


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஒரு நாள் உனை விழிகள் பார்க்க
இது யார் என இமைகள் கேட்க
இவள் தான் உன் இதயம் என்றது காதல்
உயிரை திறந்து விடு புரியும்
உனக்குள் இருப்பது யார் தெரியும்
மனதில் எனதுருவம் விரியும் காதல்
கொல்லாமல் கொல்லும் காதல் பொல்லாதது
ஜில் என்ற தீயில் ஜீவன் நனைகின்றது
எங்கே எங்கே எங்கே
(ஒரு நாள்..)

உன்னை எண்ணி துடிக்கும் துவளும் இதயம் தினசரி
இப்படித்தான் எவர்க்கும் இருக்கும் காதல் தலைவிதி
மேகத்தை போல வந்தேன் பற்றி எரிந்தேன்
உயிரோடு வாழ்ந்த போதும் மூச்சு மறந்தேன்
நீ வந்த போது நானே என்னை அறிந்தேன்
கண்ணீரில் ஓலை விட்டு காத்து கிடந்தேன்
(ஒரு நாள்..)

ஆறு ஜென்மம் இருவர் உயிரும் இணைந்து இருந்தது
இந்த ஜென்மம் உனது மனது உறவை மறந்தது
அழியாத காதல் சின்னம் கட்டி முடித்தேன்
அடையாளம் காட்ட இன்று உன்னை அழைத்தேன்
வரலாற்றில் நேற்று நமது பேரை படித்தேன்
நூற்றாண்டு தாண்டி உன்னை கண்டு பிடித்தேன்
(ஒரு நாள்..)

படம்: ஆனந்த மழை
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: வாசன்

7 Comments:

சென்ஷி said...

வாவ்.. சூப்பர் சாங்க்.. ரொம்ப நன்றி மைபிரண்ட்.. இந்தப்பாட்டை யு டியுப்ல தேடி சலிச்சு போயிருந்தேன். விசுவலா பார்க்க நினைச்ச பாடல்..

இதே படத்துல இன்னொரு பாடலும் இருக்குது. “என் மனசே” அதையும் வலையேத்துங்க ப்ளீஸ்..

இந்தப்பாடலை எழுதுனது அமரர். கவிஞர் வாசன்.

சென்ஷி said...

வாசனோட பாடல்களை தொகுத்து ஒருநாள் வழங்குங்க மைபிரண்ட்!

சென்ஷி said...

சில வார்த்தைகள் தவறா தட்டச்சிருக்கீங்க மை பிரண்ட்..

//நீ வந்த போது தானே என்னை அறிந்தேன்
கண்ணீரில் ஒளி விட்டு காத்து கிடந்தேன்//

நீ வந்த போது நானே என்னை அறிந்தேன்
கண்ணீரில் ஓலை விட்டு காத்து கிடந்தேன்

சென்ஷி said...

முடிஞ்சா இந்தப்பாடலை தவறில்லாம இன்னொரு முறை திருத்தி எழுதிடுங்க. நிறைய்ய எழுத்துப்பிழை இருக்குது! :(

சென்ஷி said...

ஒரு நாள் உனை விழிகள் பார்க்க
இது யார் என இமைகள் கேட்க
இவள் தான் உன் இதயம் என்றது காதல்
உயிரை திறந்து விடு புரியும்
உனக்குள் இருப்பது யார் தெரியும்
மனதில் எனதுருவம் விரியும் காதல்
கொல்லாமல் கொல்லும் காதல் பொல்லாதது
ஜில் என்ற தீயில் ஜீவன் நனைகின்றது
எங்கே எங்கே எங்கே
(ஒரு நாள்..)

உன்னை எண்ணி துடிக்கும் துவளும் இதயம் தினசரி
இப்படித்தான் எவர்க்கும் இருக்கும் காதல் தலைவிதி
மேகத்தை போல வந்தேன் பற்றி எரிந்தேன்
உயிரோடு வாழ்ந்த போதும் மூச்சு மறந்தேன்
நீ வந்த போது நானே என்னை அறிந்தேன்
கண்ணீரில் ஓலை விட்டு காத்து கிடந்தேன்
(ஒரு நாள்..)

ஆறு ஜென்மம் இருவர் உயிரும் இணைந்து இருந்தது
இந்த ஜென்மம் உனது மனது உறவை மறந்தது
அழியாத காதல் சின்னம் கட்டி முடித்தேன்
அடையாளம் காட்ட இன்று உன்னை அழைத்தேன்
வரலாற்றில் நேற்று நமது பேரை படித்தேன்
நூற்றாண்டு தாண்டி உன்னை கண்டு பிடித்தேன்
(ஒரு நாள்..)

============

மன்னிக்கனும். இது எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுங்கறதால தவறா இருந்த வரிகளையும் எழுத்துப்பிழைகளையும் திருத்திட்டேன் :)))

Unknown said...

நன்றி சகோ

Unknown said...

பாடல் வரிகள் பதிவிற்கு மிக்க நன்றி

Last 25 songs posted in Thenkinnam