Friday, September 4, 2009

வரும் வழியெங்குமே என் முகம் தோன்றலாம்

வரும் வழியெங்குமே
என் முகம் தோன்றலாம்
இந்த நிலச்சூட்டிலே
என் மனம் காணலாம்
நீ வரும் சாலையில்
சாரலாய் வீசவா
ஆசையை தாங்கியே
தோழனே நேரில் வா
உன்னை வரவேற்கவே
காற்றில் மரமாகவா
உந்தன் தலை கோதவே
பூக்கும் இலையாகவா

என் கண் பேசினால்
உன் துயர் தீருமே
உன் முகம் பார்ப்பதால்
அது உயிர்வாழுமே
சேர்ந்திடும் நினைப்பிலே
அமைதி கொள் தோழனே
சாய்ந்துகொள் களைப்பிலே
தோள்களும் ஏங்குமே
நீ வரும் சேதியை
கடல் அலை கூறவே
உந்தன் நிலை போலவே
மனம் கொண்டாடுதே
எழுதியவர்: யுகபாரதி
பாடியவர் : ரஞ்சனி
இசை : சபேஷ் முரளி
திரைப்படம்: பொக்கிஷம்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

5 Comments:

ILA (a) இளா said...

பாட்டுக்கான விவரங்களை காணோங்களே

MyFriend said...

//எழுதியவர்: யுகபாரதி
பாடியவர் : ரஞ்சனி
இசை : சபேஷ் முரளி
திரைப்படம்: பொக்கிஷம்//

iLa anna, akka details lyricsleye serththu ezuthiddaangga. kandukaatheengga. :-)

கானா பிரபா said...

நல்ல பாட்டு, ஆனா பாடிய அம்மணி வாயில் பன்னை வச்சுக்கிட்டே பாடிய மாதிரி ஒரு எபெக்ட்

ஆயில்யன் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

//எழுதியவர்: யுகபாரதி
பாடியவர் : ரஞ்சனி
இசை : சபேஷ் முரளி
திரைப்படம்: பொக்கிஷம்//

iLa anna, akka details lyricsleye serththu ezuthiddaangga. kandukaatheengga. :-)//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!’

ஒரு ஃப்ளோவுல வந்திருக்கும் :))))

ஆயில்யன் said...

// கானா பிரபா said...

நல்ல பாட்டு, ஆனா பாடிய அம்மணி வாயில் பன்னை வச்சுக்கிட்டே பாடிய மாதிரி ஒரு எபெக்ட்///

உமக்கு ரொம்பத்தான் லொல்லு ஓய்!

Last 25 songs posted in Thenkinnam