Friday, September 11, 2009

மின்னலைப் பிடித்து



மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
மேகத்தில் குழைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டார்
இப்படி இங்கொரு பெண்மையை படைக்க
தன்னிடம் கற்பனை தீர்ந்தது எண்ணித்தான்
பிரம்மனும் மூர்ச்சையுற்றான்
(மின்னலைப்..)

அவளின் ஆசைக்குள் நுழைந்த காற்று
உயிரை தடவி திரும்பும் போது
மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே
ஒஹோ… மழையின் துளிகள் அவளை நனைத்து
மார்பு கடந்து இறங்கும் பொழுது
முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே
(மின்னலைப்..)

நிலவின் ஒளியை பிடித்து பிடித்து
பாலில் நனைத்து பாலில் நனைத்து
கன்னங்கள் செய்து விட்டாய்
உலக மலர்கள் பறித்து பறித்து
இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து
பெண்ணை சமைத்து விட்டார்
அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா
என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது
அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா
ஏஹே… கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா
(மின்னலைப்..)

மின் மினி பிடித்து மின் மினி பிடித்து
கண்களில் பறித்து கண்களில் பறித்து
கண்மணி கண் பறித்தாள்
தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து
மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து
ஜீவனை ஏன் எடுத்தாள்
காவித்துறவிக்கும் ஆசை வளர்த்தவள்
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆண்மை கொடுப்பவள்
பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே
ஒஹோ….. தெரிந்த பாகங்கள் உயிரை தந்திட
மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே
(மின்னலைப்..)

படம்: ஷாஜஹான்
இசை: மணிஷர்மா
பாடியவர்: ஹரீஷ் ராகவேந்திரா





-------------------------------------------------------------------------------------

செப் 11 2009 அன்று தங்கள் முதலாமாண்டு திருமண நாள்

விழாவைக் கொண்டாடும்

நாமக்கல் சிபி அவர்களின் நண்பர்

விஜய்-ஸ்வர்ணா

தம்பதியினருக்காக இந்தப் பாடல் டெடிகேட் செய்யப் படுகிறது!

பாடலை விரும்பிக் கேட்டவர் : நாமக்கல் சிபி

3 Comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சூப்பர் பாட்டு..

தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்..

MyFriend said...

தம்பதிகளுக்கு என் வாழ்த்துக்களும் உரித்தாகுக. :-)

ஆயில்யன் said...

தம்பதிகளுக்கு என் வாழ்த்துக்களும் உரித்தாகுக. :-)

Last 25 songs posted in Thenkinnam