Sunday, September 27, 2009

நீ காற்று நான் மரம்



நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கே விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்
(நீ காற்று..)

நீ அலை நான் கரை
என்ன அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ உடல் நான் நிழல்
நீ விழ வேண்டாம் நான் விழுவேன்
நீ கிளை நான் இலை
உன்னை ஒட்டும் வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன்
நீ விழி நான் இமை
உன்னை சேறும் வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ ஸ்வாசம் நான் தேகம்
நான் உன்னை மட்டும் உயிர்த்திட அனுமதிப்பேன்
(நீ காற்று..)

நீ வானம் நான் நீலம்
உன்னி நானாய் கலந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை
நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில் நான் குயில்
உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன்
நீ உடை நான் இடை
உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி
என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன்
(நீ காற்று..)

படம்: நிலாவே வா
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam