Monday, July 5, 2010

உந்தன் தேசத்தின் குரல்



உந்தன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா
சொந்த வீடு உன்னை வா என்று அழைக்குதடா தமிழா
அந்த நாட்களை நினை
அவை நீங்குமா உனை
நிழல் போல் வராதா
அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா

வானம் எங்கும் பறந்தாலும்
பறவை என்னும் தன் கூட்டில்
உலகம் எங்கும் வாழ்ந்தாலும்
தமிழன் என்னும் தாய் நாட்டில்
சந்தர்ப்பங்கள் வாந்தாலும்
அங்கு செல்வ மரம் காய்த்தாலும்
உள் மனத்தில் கூவல் உந்தன் செவியில் விழாதா
(உந்தன்..)

கங்கை உனை அழைக்கிறது
யமுனை உன்னை அழைக்கிறது
இமயம் உன்னை அழைக்கிறது
பல சமயம் உன்னை அழைக்கிறது
கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்கும்
சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்கும்
தென்னம் தோப்பு துறவுகள் அழைக்க
கட்டி காத்த உறவுகள் அழைக்க
நீ தான் தின்ன நிலா சோறு நான் அழைக்க
(உந்தன்..)

பல் போல உள்ள வென்னிலவு
பார்த்தால் சிறு கரை இருக்கு
மலர் போல் உள்ள தாய் மொழியில்
மாறாத சில வலி இருக்கு
கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்
அதில் செழிக்க வேண்டும் உன் மைகள்
இந்த தேசம் உயரட்டும் உன்னாலே
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
அன்பு தாயின் மடி உன்னை அழைக்குதே தமிழா
(உந்தன்..)

படம்: தேசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: AR ரஹ்மான்
வரிகள்: வாலி

1 Comment:

நிலாமதி said...

மிகச்சிறந்த ......சோகம் இழையோடும் பாடல்களில் இதுவும் ஒன்று. பதிவுக்கு நன்றி.

Last 25 songs posted in Thenkinnam