Tuesday, July 27, 2010

காதல் வெண்ணிலா கையில் சேருமா

காதல் வெண்ணிலா
கையில் சேருமா
சொல்லு பூங்காற்றே நீ சொல்லு
பூங்காற்றே

இமையாக நானும் இருப்பேன்
இமைக்காமல் பார்த்து ரசிப்பேன்
பல ஜென்மம் நான் எடுப்பேன்
உனக்காக காத்திருப்பேன்

[காதல் வெண்ணிலா]

வானத்து நிலவாய் நீ இருந்தால்
உனக்கு பதில் நான் தேய்ந்திடுவேன்
தீபத்தை போலே நீ இருந்தால்
உனக்கு பதில் நான் உருகிடுவேன்

பூ வனம் போலே நீ இருந்தால்
பூவுக்கு பதில் நான் உதிர்ந்திடுவேன்
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே

[காதல் வெண்ணிலா]

ஓவியம் போல் உன்னை வரைந்திடவே
உதிரம் கொண்டு நிறமெடுப்பேன்
சிலையென உன்னை செதுக்கிடவே
இமைகள் என்னும் உளியெடுப்பேன்

கவிதையைப் போல் உன்னை எழுதிடவே
உயிருக்குள் இருந்து சொல் எடுப்பேன்
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே

[காதல் வெண்ணிலா]


Get Your Own Hindi Songs Player at Music Plugin

திரைப்படம் : வானத்தைப்போல
பாடியவர் :ஹரிஹரன்
இசை: SA ராஜ்குமார்,
பாடல் : பா.விஜய்

2 Comments:

ஆயில்யன் said...

ஆஹா இன்னிக்கு இந்த பாட்டு ரவுண்டு கட்டி கேட்டுகிட்டிருக்கேன் போல :))


சூப்பரூ! விஜய்காந்த் சார் பீல் பண்ணி ஹரிஹரன் மாதிரி பாடுறச்ச எனக்கு அப்படியே கண்ணுல ஆனந்த கண்ணீர் வந்துடும் :)

'பரிவை' சே.குமார் said...

நல்ல பாடல்... எப்பொழுது வேண்டுமானாலும் கேட்கலாம்.

Last 25 songs posted in Thenkinnam