Saturday, July 24, 2010

தில்லாலங்கடி - சொல்பேச்சு கேட்காத சுந்தரியே



சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே
நீயாகப் பொய்ப்பேசப் போகுறியே
மின்சாரம் மேலே போய் மோதுறியே
ஏமாந்துப் போவாதே ஏமாத்திப்போவாதே
அழகான ஆபத்தில் மாட்டிக்கொள்ள போகாதே
கண்மூடி ஏங்காதே கீழ்ப்பாக்கம் போகாதே
கேட்டுக்கோ அவந்தான் தில்லாலங்கடி
அவன் நல்லப்பையன் தானா
இல்லக் கெட்டப்பையன் தானா
தெரியலையேப் புரியலையே மெல்ல ஏதோ ஆனேன்
அவன் பேச்சில் சொக்கிப்பேனேன்
இருக்கண்ணில் சிக்கிப்போனேன்
பிடிச்சிருக்கா பிடிக்கலையா யாரைக் கேச்கப்போவேன்
(சொல்பேச்சு..)

அடிப்பெண்ணே கொஞ்ச நாளாய் கொஞ்ச நாளாய்
கோபம் என்ன
நடந்தால் உன் கால்கள் மிதக்குதா நெறுப்பாக
எந்தன் காதல் அறியுதா
இது என்னக்காதலாலே கூடுவிட்டுப் பாய்கிறாயே
விழியோடு என் உருவம் தெரியுதா
புதிதாக ஒரு உலகம் விரியுதா

பயம் பயம் அதை அறியாமல் செல்வான் அவன்
ஜெயம் ஜெயம் என்று தினம் தினம் என்பானவன்
அழகான கள்ளனோ அன்பான வில்லனோ
அதனாலே காதல் ஏக்கம் கொண்டாயோ
எப்போதும் இல்லாது சந்தோஷம் தந்தானே
ஐயய்யோ ஆதிமூலம் தந்தாயோ
ஏமாந்துப்போகாதே ஏமாத்திப்போகாதே
கண்மூடிக் கண்டேனே சடுகுடு ஆடாதே
(சொல்பேச்சு..)

அங்கும் இங்கும் எங்கேப்பார்க்கும் போதும்
அவன் பூ தான்
நெஞ்சை அள்ளித் தூக்கிக்கொண்டுப்போகும்
அவன் ஞாபகம் காத்தாடிப் போலத்தான்
கண் முன்னேப் பறப்பானே
பெண்ணே நீ இவனை விட்டுப்போகாதே
கண்ணாடி நான் பார்த்தால் முன்னாடி வந்தானே
உனக்கிந்த காதல் சுகம் புரியாதே
ஏமாந்துப்போனேனே ஏமாத்திப்போனாயே
உன்னாலே உன்னாலே காதல் சுகம் கண்டேனே
(சொல்பேச்சு..)

படம்: தில்லாலங்கடி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: சித்ரா, ஷ்ரேயா கோஷல், யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: நா. முத்துக்குமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam