Sunday, July 18, 2010

காதல் சொல்ல வந்தேன் - என்ன என்ன என்ன ஆகிறேன்



என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல என்னில் போகிறேன்
தொட்டு பிடித்திடும் தூரத்தில் பறக்கிறேன்
நிலவைப் பிடிக்கிறேன்
காதல் சிலை ஒன்று நெஞ்சம் சேரவே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதியானதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே
(என்ன என்ன..)

பார்வையில் உந்தன் யோசனை
புரிந்து சேவையாவும் செய்வேன்
உயிருக்கும் ஒரு நூலினை கோர்த்து
உன்னை அங்கு நெய்வேன்
மண்ணில் ஏது சுகம்
பெண்ணே உந்தம் முகம்
உன்னிடத்தில் என்னைக் கேட்டேன்
உன் காதல் போதுமே
என் ஜென்மம் தீருமே

காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதியானதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே
(என்ன என்ன..)

விதை என அன்று விழுந்தது
வளர்ந்து விருச்சமாகும் நேரம்
கனவெனக் கண்ணில் இருந்தது
கரைந்து காதலாக மாறும்
எதை விரும்பினேன் அதை அடைகிறேன்
உன்னிடத்தில் என்னை கேட்கிறேன்
செத்தாலும் உன் மடி தந்தாலே நிம்மதி

காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதியானதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே
(என்ன என்ன..)

படம்: காதல் சொல்ல வந்தேன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: விஜய் ஜேசுதாஸ்
வரிகள் : நா. முத்துக்குமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam