Saturday, July 17, 2010

காதல் சொல்ல வந்தேன் - அன்புள்ள சந்தியா



அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்
என்னை எனக்கு தருவாயா
இல்லை காற்றில் விடுவாயா
உன் பதிலை எதிர்ப்பார்த்து
இங்கே எனது இதயம்
எங்கே எனது இதயம்
(அன்புள்ள..)

எந்தப்பக்கம் நீ சொல்லும்போதும்
எந்தன் காதல் ஆகாயம் ஆகும்
கண்ணை மூடிக்கொண்டாலும் மறையாதே
தூறல் வந்தால் கோலங்கள் அழியும்
காலம் வந்தால் கல்வெட்டும் அழியும்
என்றும் பென்ணே என் காதல் அழியாதே
அடி கோவில் மூடினால் கூட
கிளி கவலைப்படுவதே இல்லை
அந்த வாசல் கோபுரம் மீது
அதன் காதல் குறைவதே இல்லை
உந்தன் காலடி எந்தன் வாழ்வின் வேரடி
(அன்புள்ள..)

தாயை கண்டால் தன்னாலே ஓடும்
பிள்ளைப்போலே என் காதல் ஆகும்
அன்பே அதை உன் கண்கள் அறியாதா
என்றோ யாரோ உன் கையை தொடுவார்
இன்பம் துன்பம் எல்லாமே அறீவான்
அன்பே அது நானாகக்கூடாதா
உன் காதல் என்னிடம் இல்லை
நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை
இந்த காதல் என்பதே தொல்லை
உயிரோடு எறிக்குதே என்னை
உன்னை நீங்கினால் எங்கே போவேன் நானடி
(அன்புள்ள..)

படம்: காதல் சொல்ல வந்தேன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam