Thursday, July 8, 2010

மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்



மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முத்தம் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா
அது மலரின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா

கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்
சின்ன உலி தட்டி தட்டி எழுப்பும்
அது கல்லின் தோல்வியா
இல்லை உலியின் வெற்றியா

யார் சொல்வதோ யார் சொல்வதோ
பதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ

மேகம் என்பது அட மழை முடிச்சு
காற்று முட்டினால் அவிழ்ந்து கொள்ளும்
காதல் என்பது இரு மனமுடிச்சு
கண்கள் முட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும்
மேகங்கள் முட்டிக்கொள்வதாலே சண்டை என்று பொருள் இல்லை
தேகங்கள் முட்டிக்கொள்வதாலே ஊடல் என்று பொருள் இல்லை
இதழ்கள் பொய் சொல்லும் இமைகள் மெய் சொல்லும்
தெரியாதா உண்மை தெரியாதா
காதல் விதைப்போல மௌனம் மண் மூலம்
முளைக்காதா மண்ணை துளைக்காதா
(யார் சொல்வதோ..)

பனிக்குடங்கள் மெல்ல உடைந்துவிட்டால்
உயிர் ஜனிக்கும் உயிர் ஜனிக்கும்
மௌன குடங்கள் மெல்ல உடைந்துவிட்டால்
காதல் பிறக்கும் காதல் பிறக்கும்
உள்ளத்தை மூடி மூடி தைத்தால்
கலை இல்லை காதல் இல்லை
உள்ளங்கை போலே உள்ளம் வைத்தால்
பயம் இல்லை பாரம் இல்லை
நாணல் காணாமல் ஊடல் கொண்டாலும்
நனைக்காதா நதி நனைக்காதா
கவனம் நீரோடு கவிழ்ந்தேன் நின்றாலும்
திறக்காதா கதிர் திறக்காதா
(யார் சொல்வதோ..)

படம்: குஷி
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்

1 Comment:

kiruthi said...

I think இதயம் மெய் சொல்லும்
தெரியாதா. Not இமைகள்

Last 25 songs posted in Thenkinnam