Sunday, November 2, 2008

769. காதலில் விழுந்தேன் - தோழியா என் காதலியா


<p><a href="undefined?e">undefined</a></p>

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்க சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓஹோஹோ பெண்ணே

ஏனடி என்னை கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே என்னை காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளை தொட்டு பிரிக்கிறாய்
இரவெல்லாம் செத்து பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி
(தோழியா..)

ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்
அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்
சிலுவைகளை நான் சுமந்து நின்றேன்
சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய்
விழிகள் ஓரம் நீர் துளியை
மகிழ்ச்சி தந்து உளர வைத்தாய்
பாலைவனத்தில் பூக்கள் தந்து
சொர்க்கங்களை கண் அருகில் காட்டினாய்
கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்
காலை நேரத்தில் இரவு கண்டேன்
வெள்ளை நிறத்து தேவைதையே
வண்ணங்களை தந்து விட்டு
என் அருகில் வந்து நில்லு
(தோழியா..)

இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்
மின்மினி பூச்சிகள் மிதக்க விட்டாய்
தனி அறையில் அடைந்து விட்டேன்
சிறகுகள் கொடுத்து என்னை பறக்க விட்டாய்
அலைகள் அடித்து தொலைந்து விடும்
தீவை போல மாட்டிக் கொண்டேன்
இறுதி சடன்கில் மிதிகள் படும்
பூவை போல் கசங்கி விட்டேன்
தெய்வம் பூகிக்கு வருவதில்லை
தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்
தாயும் இங்கு எனக்கு இல்லை
எனக்கு தாயை உன் உருவில் தந்து விட்டான்
(தோழியா..)

படம்: காதலில் விழுந்தேன்
இசை: விஜய் ஆந்தோனி
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, மேகா, ஸ்ரீ சரண்

1 Comment:

Om Santhosh said...

மிக அருமையான பாடல். வரிகள். இப்பாடல் எழுதிய பாடல்யச்ரியர்களுக்கு வாழ்த்துக்கள்.

Last 25 songs posted in Thenkinnam