Friday, January 23, 2009

903. ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே - நந்தலாலா





ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே
அன்பு ஒன்னுதான் அனாதையா

யாரு இதை கண்டுகொள்வார்?
கைகளிலே ஏந்திக்கொள்வார்?
சொந்தம் சொல்ல யார் வருவார்?
அன்புக்கு யார் அன்பு செய்வார்?

ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே
அன்பு ஒன்னுதான் அனாதையா

உன்னைப் போல என்னை எண்ணினால்
நெஞ்சில் கங்கை ஆறு ஓடுமே
துன்பம் தீர்க்க நீளும் கைகளில்
சொர்க்கம் வந்து கை கோர்க்குமே
கோவில் குளம் யாவும் இங்கே
அன்பின் அடையாளம் அல்லவா
ஏழைக்கென்று தந்ததெல்லாம்
ஈசன் கையில் சேருமல்லவா
கண்களில்லா மனிதருக்கு
கால்களென நாம் நடந்தால்
நம் பூமியில் அனாதை யார்? அனாதை யார்?

ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே
அன்பு ஒன்னுதான் அனாதையா

மண்ணில் தானே எல்லைக்கோடுகள்
மனதில் கோடு யார் போட்டது?
பெற்றால்தானா பிள்ளை பூமியில்
எல்லாம் எல்லாம் நம் பார்வையில்
நாதியற்ற பூவும் இல்லை
நட்டு வைத்ததால் வந்தது
நாதியற்றா நாம் பிறந்தோம்?
அன்னை இன்றி யார் வந்தது?
எங்கிருந்தோ இங்கு வந்தோம்
வந்ததெல்லாம் சொந்தங்களே
நம் பூமியில் அனாதை யார்? அனாதை யார்?

ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே
அன்பு ஒன்னுதான் அனாதையா


படம்: நந்தலாலா
பாடல்: மு.மேத்தா
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam