வானத்தை பார்த்தேன் பூமிய பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
வானத்தை பார்த்தேன் பூமிய பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
அட பல நாள் இருந்தேன் உள்ளே
அந்த நிம்மதி இங்கில்லே
உள்ள போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லீங்க
வெளியே உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லீங்க
வானத்தை பார்த்தேன் பூமிய பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
குரங்கிலிருந்து பிறந்தானா
குரங்கை மனிதன் பெற்றானா
யாரை கேள்வி கேட்பது நாதில்லையே
கடவுள் மனிதனை படைத்தானா
கடவுளை மனிதன் படைத்தானா
ரெண்டு பேரும் இல்லையே
ரொம்ப தொல்லையே
அட நான் சொல்வது உண்மை
இதை நீ நம்பினால் நன்மை
அட நான் சொல்வது உண்மை
இதை நீ நம்பினால் நன்மை
வானத்தை பார்த்தேன் பூமிய பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
அட பலநாள் இருந்தேன் உள்ளே
அந்த நிம்மதி இங்கில்ல
சில நாள் இருந்தேன் கருவறையில்
பல நாள் கிடந்தேன் சிறையறையில்
அம்மா என்னை ஈன்றது அமாவாசையாம்
அதனால் பிறந்தது தொல்லையடா
ஆனால் என் மனம் வெள்ளையடா
பட்டப்பாடு யாவுமே பாடந்தானாடா
ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை
இல்லை போராட்டமே வாழ்க்கை
ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை
இல்லை போராட்டமே வாழ்க்கை
வானத்தை பார்த்தேன் பூமிய பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
அட பல நாள் இருந்தேன் உள்ளே
அந்த நிம்மதி இங்கில்ல
உள்ள போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லீங்க
வெளியே உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லீங்க
வானத்தை பார்த்தேன் பூமிய பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
அட பல நாள் இருந்தேன் உள்ளே
அந்த நிம்மதி இங்கில்ல
அந்த நிம்மதி இங்கில்ல
படம் : மனிதன் (1987)
இசை : சந்திரபோஸ்
பாடியவர்: பாலசுப்ரமணியம்
வரிகள் : வைரமுத்து
0 Comments:
Post a Comment