Monday, December 17, 2012

ரெக்கை முளைத்தேன்




ரெக்கை முளைத்தேன் ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று வானம் ஏற அழைத்தேன்
தப்பி தொலைந்தேன் போக துடித்தாய்
உடன் யாரும் இல்லாத தேசம் தேடி பிடித்தேன்

எனக்கென பதுக்கிய கனவுகள் முதன்முறை தரை விட்டு பறக்குது உன்னாலே
உனக்கென செதுக்கிய நினைவுகள் முதன்முறை உயிர் வந்து துடிக்குது உன்னாலே

எத்தனை வேகம் சென்றாலும் நிற்பதாய் தோன்றும் உன்னாலே
எத்தனை பக்கம் வந்தாலும் வெட்கமே இல்லை உன்னாலே

கண்களில் மின்னிடும் காதலை நான் அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சினில் தேனை பாய்ச்சிட அதை நீயே சொன்னாய் மறுமுறை

ரெக்கை விரித்தேன் ரெக்கை விரித்தேன்
எனை உடன் வா என்று வானம் ஏற அழைத்தாய்
தப்பி தொலைந்தேன் போக துடித்தேன்
உடன் யாரும் இல்லாத தேசம் தேடி பிடித்தாய்

பகலிலே சுவரை வெறித்தேன்
தெருவிலே தனியே சிரித்தேன்
கழன்றதாய் பேரும் எடுத்தேன் எல்லாம் உன்னாலே

இரவிலே தூக்கம் தொலைத்தேன்
படுக்கையில் சுற்றி அலைந்தேன்
வகுப்பிலே தூங்கி வழிந்தேன் எல்லாம் உன்னாலே

கட்டம் போட்ட ஒன்றா இல்லை கோடு போட்ட ஒன்றா
எந்த சட்டை போட என முட்டிக் கொண்டேன் உன்னாலே

பச்சை வண்ண பொட்டா  இல்லை மஞ்சள் வண்ண பொட்டா
நெற்றி மேலே ரெண்டு நான் ஒட்டிக் கொண்டேன் உன்னாலே

கண்களில் மின்னிடும் காதலை நான் அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சினில் தேனை பாய்ச்சிட அதை நீயே சொன்னாய் மறுமுறை

கவிதைகள் கிறுக்கிட வேண்டாம்
கசக்கியும் எறிந்திட வேண்டாம்
எறிந்ததை மீண்டும் பிரித்து சிரித்திட வேண்டாமே

காற்றிலே முத்தம் வேண்டாம்
வார்த்தையில் அர்த்தம் வேண்டாம்
சுற்றிலும் சத்தம் போடும் ஏதும் வேண்டாமே

சாலை ஓர தேநீர் அது கோப்பை ரெண்டில் வேண்டாம்
பேருந்தெறும் போதும் இனி டிக்கெட் ரெண்டு வேண்டாமே

பாறை மேலே ஏறி நம் பேரை தீட்ட வேண்டாம்
எல்லை கொஞ்சம் மீற இனி அச்சம் ஏதும் வேண்டாமே

கண்களில் மின்னிடும் காதலை நீ அன்றே கண்டாய் ஒருமுறை
நெஞ்சினில் தேனை பாய்ச்சிட அதை நானே சொன்னேன் மறுமுறை

ரெக்கை முளைத்தேன் ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று வானம் ஏற அழைத்தேன்
தப்பி தொலைந்தேன் போக துடித்தேன்
உடன் யாரும் இல்லாத தேசம் தேடி பிடித்தாய்

இனி இனி தனித்தனி உலகினில் இருவரும் உலவிடும் நிலையே வேண்டாமே
இனி இனி மனதினில் தேக்கிட காதல் உண்டாக்கிடும் வலியே வேண்டாமே

ஓரக் கண் பார்வை வேண்டாமே ஓரடி தூரம் வேண்டாமே
மாறிடும் நேரம் வேண்டாமே ஊரிலே யாரும் வேண்டாமே

கண்களில் மின்னிடும் காதலை நான் அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சினில் தேனை பாய்ச்சிட அதை நானே சொன்னேன் மறுமுறை

படம் : சுந்தரபாண்டியன்
இசை : ரகுநந்தன்
பாடியவர்கள் : ஜி.வி. பிரகாஷ், ஷ்ரேயா கோஷல்
வரிகள் : மதன் கார்க்கி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam