Tuesday, December 18, 2012

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள



நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச
அட உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
எனக்காக வந்தவனே இளநெஞ்சில் நின்னாயே
உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச
உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
எனக்காக வந்தவனே இளநெஞ்சில் நின்னாயே
உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட

ஆத்து வெள்ளம் நீ என்றால் ஆடும் தோணி நானே
ஆட விட்டு அக்கரையில் கொண்டு சேர்ப்பாயே
பட்டாம்பூச்சி நான் என்றால் எட்டு திசை நீயே
எந்த பக்கம் போனால் என்ன நீதான் நிப்பாயே
மெட்டி வாங்கி தர சொல்லி குட்டி விரல் கூத்தாட
பட்டு சேல பல நூறு பாழா கிடக்கு
பக்கத்துல நான் தூங்க பத்துமடை பாய் வாங்க
நித்தம் நித்தம் நான் ஏங்க நாளும் போகுது

என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச
உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச

முள்ளு தச்ச காயத்த முத்தம் இட்டு ஆத்த
பத்து ஊரு தாண்டி வந்து பக்கம் நிப்பாயே
பட்ட பகல் என்றாலும் பித்தம் தலைக்கேறும்
என்னை சீண்டி ஏதோ ஏதோ பேச வைப்பாயே
பத்து தல பாம்பாக வட்டமிடும் என் ஆச
மொட்டு போல முகம் கூப்பி உள்ளம் மறைப்பேன்
நெஞ்சுக்குழி மேலாட தாலி கொடி நான் தேட
மஞ்சத்தண்ணி நீரோட எப்போ வருவ

என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச
உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
எனக்காக வந்தவனே இளநெஞ்சில் நின்னாயே
உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட

படம் : சுந்தரபாண்டியன் (2012) 
இசை : ரகுநந்தன் 
பாடியவர் : சைந்தவி 
வரிகள் : தாமரை

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam