ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
சேலை சோலையில் பருவ சுகம் தேடும் மாலையில்
சேலை சோலையில் பருவ சுகம் தேடும் மாலையில்
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
ஜீவநதி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபவம்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற
வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே
வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே
நாதசுரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
சேலை சோலையில் பருவ சுகம் தேடும் மாலையில்
சேலை சோலையில் பருவ சுகம் தேடும் மாலையில்
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
படம் : தங்கமகன் (1983)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம், ஜானகி
வரிகள் : புலமைப்பித்தன்
0 Comments:
Post a Comment