உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேர்
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேர்
கொண்டாடும் போது ஒரு நூறு பேர்
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேர்
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேர்
கொண்டாடும் போது ஒரு நூறு பேர்
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேர்
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேர்
தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்
இவன் தேறாத வைத்தியத்தை சேர்ந்து படித்தான்
படித்தான் முடித்தான் ஹோய்
தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்
இவன் தேறாத வைத்தியத்தை சேர்ந்து படித்தான்
படித்தான் முடித்தான்
பிறர் நோய் தீர்க்கும் வைத்தியசன்
நோய் தீர்க்க மாட்டாமல்
பாய் போட்டு தூங்குதப்பா
உயிரும் பேயோடு சேர்ந்தப்பா
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேர்
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேர்
கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார்
எந்த காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார்
கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார்
எந்த காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார்
நல்ல சேதி சொல்லும் ஜோசியர்க்கும்
நீதி சொல்லும் சாவு வந்து
தேதி வைத்து விட்டதடியோ
கணக்கில் மீதி வைக்கவில்லை அடியோ
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேர்
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேர்
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்
அந்த பட்டயத்தில் கண்டது போல வேலி எடுத்தான்
எடுத்தான் முடித்தான் ஹோய்
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்
அந்த பட்டயத்தில் கண்டது போல வேலி எடுத்தான்
அதில் எட்டு அடுக்கு மாடி வைத்து
கட்டிடத்தை கட்டி விட்டு
எட்டு அடிக்குள் வந்து படுத்தான்
மண்ணை கொட்டியவன் வேலி எடுத்தான்
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேர்
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேர்
கொண்டாடும் போது ஒரு நூறு பேர்
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேர்
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேர்
கொண்டாடும் போது ஒரு நூறு பேர்
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு
படம் : முகராசி
இசை : மகாதேவன்
பாடியவர் : செளந்தர்ராஜன்
வரிகள் : கண்ணதாசன்
0 Comments:
Post a Comment