Saturday, December 1, 2012

பில்லா II - உனக்குள்ளே மிருகம்



உனக்குள்ளே மிருகம் தூங்கி விட நினைக்கும் 
எழுந்து அது நடந்தால் ஏரிமலைகள் வெடிக்கும் 
கனவுகளை உணவாய் கேட்டு அது துடிக்கும் 
உன்னை அது விழுங்கி உந்தன் கையில் கொடுக்கும் 
எரிக்காமல் தேன்னடை கிடைக்காது 
உதைக்காமல் பந்து அது எழும்பாது 
வலி அது தான் உயிர் பிழைக்கும் 
இது வரை இயற்கையின் விதி இது தான் 

நரகம் அதில் நீயும் வாழ்ந்தால் 
மிருகமென மாற வேண்டும் 
பலி கொடுத்து பயமுறுத்து 
வெட்ட வெட்ட தலை நிமிர்த்து 
உலகமது உருண்டை இல்லை நிழலுலகில் வடிவம் இல்லை 
இலக்கணத்தை நீ உடைத்து தட்டி தட்டி அதை நிமிர்த்து 
இங்கு நண்பன் யாரும் இல்லையே எதிர்க்கும் பகைவன் யாரும் இல்லையே 
இனி நீதான் உனக்கு நண்பனே என்றும் நீதான் உனக்கு பகைவனே 
வலி அதுதான் உயிர் பிழைக்கும் 
இது வரை இயற்கையின் விதி இது தான் 

முதல் அடியில் நடுங்க வேண்டும் 
மறு அடியில் அடங்க வேண்டும் 
மீண்டு வந்தால் மீண்டும் அடி 
மறுபடி மரண அடி 
அடிக்கடி நீ இறக்க வேண்டும் 
மறுபடியும் பிறக்க வேண்டும் 
உறக்கத்திலும் விழித்திரு நீ இரு விழியும் திறந்தப்படி 
இனி நீ தான் உனக்கு தொல்லையே 
என்றும் நீ தான் உனக்கு எல்லையே 
நீ தொட்டால் கிழிக்கும் முள்ளையே
வலிகள் இருந்தும் வலிக்க வில்லையே 
வலி அதுதான் உயிர் பிழைக்கும் 
இது வரை இயற்கையின் விதி இது தான்

படம் : பில்லா II (2012)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : ரஞ்சித்
வரிகள் : நா. முத்துக்குமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam