காற்றிலே நடந்தேனே
காதலை அளந்தேனே
நீ தொட பறந்தேனே
நான் எனை வியந்தேனே
ஐயோ ஐயோ மேகம் போலே
கலைந்து கலைந்து போகிறேன்
மெய்யோ பொய்யோ தோணவில்லை
ரசிக்கும் கவிஞன் ஆகினேன்
விண்மீன் முதுகில் ஏறினேன்
நூறு கண்டம் தாவினேன்
உன்னில் உன்னில் மூழ்கினேன்
உயிரே உயிரே ரெண்டானதே
இளமை உடைந்து திண்டாடுதே
பாறை கரைந்து பாழானதே
பார்வை நான்கும் கொண்டாடுதே
வானம் எந்தன் தலை தட்டுதே
வார்த்தை என்னுள் கவி கட்டுதே
நீயும் நானும் கேட்காமல் நாம் ஆனதேன்?
மூச்சுக் காற்றிலே நுழைந்தாயே
பூச்சுப் பூட்டுகள் திறந்தாயே
நீ யாரடா தேடினேன் முகவரிதானே
வாய் கூசுதே உன் பேரை தான் பேசுதே
சாரலில் நான் காய்கிறேன் உன் விழி குடைதானா
ஊமையாய் நான் தேய்கிறேன் உன் மொழி விடைதானா
ரசித்து கவியை நாடினேன் உன்னில் உன்னில் மூழ்கினேன்
மின்னல் முதுகில் ஏறியே நானும் கண்டம் தாண்டினேன்
படம்: ஆதிபகவன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: அறிவுமதி
பாடியவர்கள்: உதித் நாராயணன், ஸ்வேதா பண்டிட்
0 Comments:
Post a Comment