Friday, December 7, 2012

ராஜா என்பார் மந்திரி



ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள 
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள 
ஒரு ராணியும் இல்லை வாழ

கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை அனுபவிக்க யோகமில்லை
கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை அனுபவிக்க யோகமில்லை
பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒரு வழி இல்லை

ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள 
ஒரு ராணியும் இல்லை வாழ

நிலவுக்கு வானமுண்டு மலருக்கு வாசமுண்டு
கொடிக்கொரு கிளையுமுண்டு எனக்கென என்ன உண்டு
நிலவுக்கு வானமுண்டு மலருக்கு வாசமுண்டு
கொடிக்கொரு கிளையுமுண்டு எனக்கென என்ன உண்டு
ஏன் படைத்தானோ இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை

ராஜா என்பேன் மந்திரி என்பேன் ராஜ்ஜியம் உனக்கு உண்டு 
 ஒரு ராஜகுமாரன் உண்டு
ஒரு உறவும் உண்டு அதில் பரிவும் உண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்

தெய்வத்தில் உன்னை கண்டேன் தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்கு களங்கம் என்று உறவுக்குள் விலகி நின்றேன்
தெய்வத்தில் உன்னை கண்டேன் தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்கு களங்கம் என்று உறவுக்குள் விலகி நின்றேன்
கலக்கம் ஏனோ மயக்கம் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு

ராஜா என்பேன் மந்திரி என்பேன் ராஜ்ஜியம் உனக்கு உண்டு 
ஒரு ராஜகுமாரன் உண்டு
ஒரு உறவும் உண்டு அதில் பரிவும் உண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்

படம் : புவனா ஒரு கேள்விக்குறி (1977)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம், ஜானகி
வரிகள் : பஞ்சு அருணாச்சலம்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam