சித்திரை நிலா ஒரே நிலா
பரந்த வானம் படைச்ச கடவுளு
எல்லாமே ஒத்தையிலே நிக்குதுடே
நீ கூட ஒத்தையில நிக்கிறடே
எட்டு வை மக்கா
எட்டு வச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா
மனிதன் நினைத்தால் வழி பிறக்கும்
மனதிலிருந்தேஒளி பிறக்கும்
புதைக்கின்ற விதையும் முயற்சிகொண்டால் தான்
பூமியும் கூட தாழ் திறக்கும்
எட்டு வை மக்கா
எட்டு வச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா
கண்களில் இருந்தே காட்சிகள் தோன்றும்
களங்களிலிருந்தே தேசங்கள் தோன்றும்
துயரத்தில் இருந்தே காவியம் தோன்றும்
தோல்வியில் இருந்தே ஞானங்கள் தோன்றும்
சூரியன் மறைந்தால் விளக்கொன்று சிரிக்கும்
தோணிகள் கவிழ்ந்தால் கிளை ஒன்று கிடைக்கும்
மரமொன்று விழுந்தால் மறுபடி தழைக்கும்
மனமின்று விழுந்தால் யார் சொல்லி நடக்கும்
பூமியைத் திறந்தால் புதையலும் இருக்கும்
பூக்களைத் திறந்தால் தேன்துளி இருக்கும்
நதிகளை திறந்தால் கழனிகள் செழிக்கும்
நாளையைத் திறந்தால் நம்பிக்கை சிரிக்கும்
படம்: கடல்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: விஜய் ஜேசுதாஸ்
2 Comments:
nice one . Thanks.
Vetha.Elangathilakam.
பாடல் நன்று.
Post a Comment