என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இளம் நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற
கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு
மருதாணி அறைச்சு வச்சேன்
மஞ்ச தண்ணி கரைச்சு வச்சேன் ராசா ராசா
உருகாம உருகி நின்னேன்
உன் அழகை பருகி நின்னேன் லேசா லேசா
என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இளம் நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற
கண்ணாலே பேசாதே கையாலே பேசு
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு
மருதாணி அறைச்சு வச்ச
மஞ்ச தண்ணி கரைச்சு வச்ச ராணி ராணி
உருகாம உருகி நின்னேன்
உன் அழகை பருகி நின்னேன் வா நீ வா நீ
பாட்டு ஒரு பாட்டு புது பாட்டு இசை போட்டு
முந்தானை தந்தானம் பாட
கேட்டு அதை கேட்டு கிறங்காமல் ஸ்ருதி மீட்டு
நெஞ்சோரம் சிங்காரம் தேட
வயலோரம் வரப்பொரம் தினம் காத்திருந்து வாட
இரு தோளில் ஒரு மாலை இது ராத்திரியில் சூட
நான் உறவாய் வரவா வரவா
என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இளம் நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற
கண்ணாலே பேசாதே கையாலே பேசு
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு
மருதாணி அறைச்சு வச்சேன்
மஞ்ச தண்ணி கரைச்சு வச்சேன் ராசா ராசா
உருகாம உருகி நின்னேன்
உன் அழக பருக வந்தேன் வா நீ வா நீ
என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இளம் நெஞ்ச தொட்டு தொட்டு என் தாக்குற
பாடு நடை போடு அழகோடு உறவாடு
ஆகாயம் கிட்டே வராது
மூடு திரை போடு முத்தாடி விளையாடு
மூச்சோடும் என்னை விடாது
மறவேனே வருவேனே சிறு பூ பறிடத்திட தானே
வரம் நானே பெறுவேனே நீ மன்மத மலை தேனே
நான் உறவாய் வரவா வரவா
என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இளம் நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற
கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு
மருதாணி அறைச்சு வச்ச
மஞ்ச தண்ணி கரைச்சு வச்ச ராணி ராணி
உருகாம உருகி நின்னேன்
உன் அழகை பருகி நின்னேன் ராசா ராசா
என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இளம் நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற
படம்: ராமன் அப்துல்லா (1997)
இசை: இளையராஜா
பாடியவர்கள் : அருண்மொழி , பவதாரிணி
வரிகள்: வாலி
1 Comment:
நல்ல பாட்டு... பகிர்வுக்கு நன்றி...
Post a Comment