துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
துள்ளி துள்ளி துள்ளீ துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
கட்டிய தாலி உண்மையென்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
கட்டிய தாலி உண்மையென்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
மன்னன் உன்னை மறந்ததென்ன
மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
தாயே தீயில் மூழ்கி
அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்
நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு
நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு
துள்ளி துள்ளி துள்ளீ துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே
துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே
நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா
நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா
இரவென்றால் மறுநாளே விடியும்
உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்
அன்பு கொண்டு நீ ஆடு காலம் கூடும் பூப்போட
அன்பில்லை நான் ஆட தோளில்லை நான் பூப்போட
துள்ளி துள்ளி துள்ளீ
படம் : சிப்பிக்குள் முத்து
இசை : இளையராஜா
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம், ஜானகி
வரிகள் : வைரமுத்து
1 Comment:
மிகவும் பிடித்த பாட்டு...
வரிகளுக்கு மிக்க நன்றி...
Post a Comment