Tuesday, October 23, 2012

ஓராயிரம் யானை



ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
தாய் வயிற்றில் தலை கீழாக
உன் வழியோ இல்லை நேராக
தோள் சாய புது உறவிங்கே
தூண் எல்லாம் இனி தூளாக

ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி

குழலோசை இல்லை குயிலோசை இல்லை
இடியோசை ஒன்றே அறிந்தாயே
முரணோடு வாழ்ந்து முள்ளோடு சேர்ந்து
அன்பால் இன்று பூப்பூக்கின்றாய்
ஒரு ராஜா வருந்தாமல் அட புத்தன் ஜனனம் இல்லை
மனம் நொந்து நொறுங்காமல் அட சித்தன் பிறப்பதும் இல்லை
வாழ்ந்தாய் தீயின் மடியில்
சேர்ந்தாய் தீர்த்தக் கரையில்

ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி

படம் : நந்தா (2001)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : உன்னிகிருஷ்ணன்
வரிகள் : நா. முத்துக்குமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam