கருப்பு நிலா கருப்பு நிலா
கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்
கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்
சின்ன மானே மாங்குயிலே
உன் மனசுல என்ன குறை
பெத்த ஆத்தா போல் இருப்பேன்
இந்த பூமி வாழும் வரை
எட்டு திசையாவும்
கட்டி அரசாள வந்த ராசா நீதானே
கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்
பத்து மாசம் மடி ஏந்தி
பெத்தெடுத்த மகராசி
பச்சப்புள்ள உன்னை விட்டு
போனத எண்ணி அழுதாயா
மாமன் வந்து எனை காக்க
நானும் வந்து உனை காக்க
நாம் விரும்பும் இன்பம் எல்லாம்
நாளை வரும் நமக்காக
காலம் உள்ள காலம்
வாழும் இந்த பாசம்
பூ விழி இமை மூடியே
சின்ன பூவே கண்ணுறங்கு
கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்
வண்ண வண்ண முகம் காட்டி
வானவில்லின் நிறம் காட்டி
சின்ன சின்ன மழலை பேசி
சித்திரம் போல் மகனே வா
செம்பருத்தி மலர் போலே
சொக்க வல்லி மணி போலே
கன்னம் இரண்டும் மின்ன மின்ன
கண்மணியே மடி மேல் வா
பாட்டு தமிழ் பாட்டு பாட அதை கேட்டு
ஆடிடும் விளையாடிடும் தங்க தேரே நீ தானே
கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்
கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்
என் மானே மாங்குயிலே
உன் மனசுல என்ன குறை
பெத்த ஆத்தா போல் இருப்பேன்
இந்த பூமி வாழும் வரை
எட்டு திசையாவும்
கட்டி அரசாள வந்த ராசா நீதானே
படம் :என் ஆசை மச்சான் (1994)
இசை : தேவா
பாடியவர் : சித்ரா
வரிகள்: வாலி
2 Comments:
அருமையான பாடல் வரிகள்..எவ்வளவு காலம் ஆனாலும் சலிக்காது..
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
இசையும் தாலாட்டும்...
Post a Comment