Wednesday, October 3, 2012

முதல் முறை என் வாழ்வில்




முதல் முறை என் வாழ்வில் மரணத்தை பார்கிறேன்
கனவுடன் சூதாடி கடைசியில் தோற்கிறேன்
பாழடைந்த வீடாக புழுதியில் வாழ்கிறேன்
பாவி இந்த விதியாலே அழுதிங்கு சாகிறேன்

விட்டு விட்டு போ என்று வேதனைகள் சொல்லுதே
வந்து விடு வா என்று ஞாபகங்கள் கொல்லுதே
கனவில்லை நிஜம் என்று என்னை கிள்ளி பார்கிறேன்

எங்கு இனி நான் போக பாதையினை மறக்கிறேன்
இன்று வந்த பின்னாளும் நேற்றில் சென்று மிதக்கிறேன்
காதல் என்னும் நாடகத்தை கண்ட பின்பு அழுகிறேன்

முதல் முறை என் வாழ்வில் மரணத்தை பார்கிறேன்
கனவுடன் சூதாடி கடைசியில் தோற்கிறேன்

படம் : அவன் இவன் (2011) 
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : விஜய் பிரகாஷ்
வரிகள் : நா. முத்துக்குமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam