Wednesday, October 3, 2012

யார் சொல்லி காதல் வருவது



யார் சொல்லி காதல் வருவது
யார் சொல்லி காதல் போவது
யாருக்கு அடிமை இந்த காதல்
ஏன் இந்த காலம் நகருது
ஏன் இந்த காதல் தகருது
ஏன் இந்த மாறுப்பட்ட தேடல்

இதயங்கள் இழையும் தருணம் தெரிந்தால் சொல்வாய்
இமைமூடி இருந்தாலே வெளிச்சம் வருமா சொல்வாய்
பூமி முழுக்க காதல் இருக்க எங்கு ஓடி ஒளிகிறாய்
பூமி தாண்ட வழியே இல்லை வா
காதல் இங்கே தவறு என்றால்
கடவுள் கூட தவறுதான்
காதல் இன்றி கடவுள் இல்லை வா

உன்னை நீ ஏன் வதைக்கிறாய் காரணங்கள் தெரியாமல்
காதல் தானே மீண்டும் உன்னை மீட்டு எடுக்கும்
என்னை நீ ஏன் வெறுக்கிறாய் என் நிலமை புரியாமல்
காதல் உன்னை மௌனமாக அழுகவைக்கும்
தேதி போல் காதலை நீயும் கிழித்து விட முடியாதே
ஆகாயத்தை உள்ளங்கையில் மறைத்து வைக்க முடியாதே
காதலுக்கு மாற்று எதுவும் இல்லையே

ஆடை போல கழட்டி போட முடியவில்லை உன்னை நான்
உயிரை போல எனக்குள் உள்ளாய் வா
என்னை மீறி உன்னை எதுவும் செய்திடாது காதல் தான்
காதலைத்தான் நம்புகின்றேன் நான்

இதயத்தில் நீ காதலை பூட்டி வைக்க முடியாதே
சாவி எனது கரத்தில் இருக்கு புரிந்து கொள்வாய்
வாய் வழி நீ என்னை தான் வேண்டாம் என்று சொன்னாலும்
உன்னை ஒரு நாள் உந்தன் மனமே கொன்று விடுமே
நீயும் நானும் சேர்ந்தே செய்தோம் காதல் என்னும் சிற்பத்தை
சிற்பம் வேண்டாம் என்றே நீயும் தொடங்கினாய் யுத்தத்தை
இது என்ன நியாயம் நீ சொல்லடி
இன்னும் நூறு தலைமுறை இந்த மண்ணில் வாழுமே
அன்றும் இந்த காதல் இருக்கும் வா
உயிர்கள் ஜனித்த நொடியில் இருந்து
காதல் இங்கே வாழுதே
காதல் இன்றி உயிர்கள் ஏது வா

யார் சொல்லி காதல் வருவது
யார் சொல்லி காதல் போவது
யாருக்கு அடிமை இந்த காதல்
ஏன் இந்த காலம் நகருது
ஏன் இந்த காதல் தகருது
ஏன் இந்த மாறுப்பட்ட தேடல்


இதயங்கள் இழையும் தருணம் தெரிந்தால் சொல்வாய்
இமைமூடி இருந்தாலே வெளிச்சம் வருமா சொல்வாய்
பூமி முழுக்க காதல் இருக்க எங்கு ஓடி ஒளிகிறாய்
பூமி தாண்ட வழியே இல்லை வா
காதல் இங்கே தவறு என்றால்
கடவுள் கூட தவறுதான்
காதல் இன்றி கடவுள் இல்லை வா


படம்: பதினாறு (2011)
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
வரிகள்: சினேகன்

1 Comment:

திண்டுக்கல் தனபாலன் said...

இந்தப்பாடல் அதிகம் கேட்டதில்லை...

வரிகளுக்கு நன்றி...

Last 25 songs posted in Thenkinnam