Friday, October 5, 2012

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே



முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே

என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்னாளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளைத் தைக்காதே

அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கையாவின் கவிதையா

ஏய் உன்னுடைய நெற்றி உன்னை பற்றி கூறுதே
உள்ளிருக்கும் பொட்டு உந்தன் குட்டு சொல்லுதே
என்னுடய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சிக்கோ
எனக்கு இருக்கும் சக்தி பராசக்தி புரிஞ்சிக்கோ
கால் கொலுசு தான் கலகலக்குது
கையின் வளையல் காதுக்குள்ளே கானம் பாட

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளைத் தைக்காதே

போட்டிருக்கும் கோஷா வேசம் பேஷா பொருந்துதே
பெண்ணழகு மொத்தம் காண சித்தம் விரும்புதே
வெண்ணிலவில் வேகம் ஓடும் மேகம் விலகுமா
வண்ண உடல் யாவும் காணும் யோகம் வாய்க்குமா
கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு
எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே

படம் : தொட்டால் பூ மலரும் (2007)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : ஹரிச்சரண், யுவன் சங்கர் ராஜா
வரிகள் : வாலி

1 Comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பாடல்... படமாக்கிய விதம் நன்றாக இருக்கும்...

Last 25 songs posted in Thenkinnam