Tuesday, October 16, 2012

தாண்டவம் - நீ என்பதே நான் தான்னடி



நீ என்பதே நான் தான்னடி
நான் என்பதே நாம் தான்னடி

ஒரு பாதி கதவு நீயடி மறு பாதிக் கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம் சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம் காற்று வீச பார்த்திருந்தோம்

நீ என்பதே நான் தான்னடி நான் என்பதே நாம்தான்னடி
ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி


இரவு வரும் திருட்டு பயம் கதவுகளை சேர்த்து விடும்

ஓ கதவுகளை திருடி விடும் அதிசயத்தை காதில் செய்யும்

இரண்டும் கைக் கோர்த்து சேர்ந்தது இடையில் பொய்ப்பூட்டு போனது

வாசல் தள்ளாடுதே திண்டாடுதே கொண்டாடுதே

ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி


ஓ இடி இடித்தும் மழை அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம்

ஓ இன்றேனோ நம் மூச்சும் மென்காற்றில் இணைந்து விட்டோம்

இதயம் ஒன்றாகி போனதே கதவு இல்லாமல் ஆனதே

இனி மேல் நம் வீட்டிலே பூங்காற்று தான் தினம் வீசுமே


ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம் சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம் காற்று வீச பாத்திருந்தோம்


நீ என்பதே நான் தான்னடி
நான் என்பதே நாம் தான்னடி

படம் : தாண்டவம் (2012) 
இசை : பிரகாஷ் குமார் 
பாடியவர்கள் : ஹரிச்சரண், வந்தனா சீனிவாசன்
வரிகள் : நா. முத்துக்குமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam