கமலத்தண்ணி இறக்கு மச்சான்
ஏரப்பூட்டி உழுது வச்சான்
வித்துநெல்ல எடுத்து வச்சான்
விதைக்க நாளு காத்திருந்தான்
மாரி மழை பெய்யாதோ
மக்க பஞ்சம் தீராதோ
மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும் வானங்கருக்கையிலே
குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும் சோலை வயலங்கில்லையே
மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
சட்டியில மாக்கரிசி சந்தியில கோலமிட்டு
கோலம் அழியும் வர கோடை மழை பெய்யாதோ
வானத்து ராசாவே மழை திரும்பும் புண்ணியரே
சன்னல் ஒழுவாதோ சாரல் மழை பெய்யாதோ
வடக்கே மழை பெய்ய வரும் கிழக்கே வெள்ளம்
கொலத்தாங் கரையிலே அயிரை துள்ளும்
கிழக்கே மழை பெய்ய கிணறெல்லாம் புது வெள்ளம்
பச்சை வயக்காடு நெஞ்சை கிள்ளும்
நல்ல நெல்லு கதிரருத்து
புல்ல நெலி நெலியா கட்டுக்கட்டி
அவக்கட்டு கொண்டு போகையிலே
நின்னு கண்ணடிப்பான் அத்தை மகன்
உழவன் சிரிக்கணும் உலகம் செழிக்கணும்
மின்னல் இங்கு படபடக்க
மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும் வானங்கருக்கையிலே
குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும் சோலை வயலங்கில்லையே
மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
வரப்புல பொன்னிருக்கு பொன்னு கையில் கிளி இருக்கு
கிளி இருக்கும் கைய நீ எப்போ புடிப்ப
விதையெல்லாம் செடியாகி செடியெல்லாம் காய்யாகி
காய வித்து உன் கைய புடிப்பேன்
புது தண்டட்டி போட்ட புள்ள
சும்மா தல தலன்னு வளந்த புள்ள
ரா தவளையெல்லாம் குலவை இட
நான் தாவுரேன் உன் மடி மேல
கனவுகள் பளிக்கனும் கழனியும் செழிக்கணும்
வானம் கரு கருக்க
மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும் வானங்கருக்கையிலே
குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும் சோலை வயலங்கில்லையே
மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
படம் : உழவன் (1993)
இசை : ரஹ்மான்
பாடியவர் : சாகுல் ஹமீது
வரிகள் : வாலி
0 Comments:
Post a Comment