Saturday, October 6, 2012

அன்பை சுமந்து சுமந்து




அன்பை சுமந்து சுமந்து
அல்லும் பகலும் நினைந்து
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா

அன்பை சுமந்து சுமந்து
அல்லும் பகலும் நினைந்து
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா
என்னை தவிக்க விடலாமா

வான் மழையில் தான் நனைந்தால்
பால் நிலவும் கரைந்திடுமா
தீயினிலே நீயிருந்தால்
நிலவொளி தான் சுகம் தருமா
மரக்கிளையில் ஒரு குருவி கூடுக்கட்டி வாழ்ந்ததே
அந்தரத்தில் ஆடவிட்டு ஆலமரம் சாய்ந்ததே
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா
என்னை தவிக்க விடலாமா

நீ அரைச்ச சந்தனமே
வாசனை தான் மாறலியே
நேசமெனும் கோட்டையிலே
காவல் இன்னும் தீறலையே
பேசாமல் போனதென்ன
பாசப்புறா விண்ணிலே
வீசாமல் வீசுகின்ற
பாசப்புயல் மண்ணிலே
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா

அன்பை சுமந்து சுமந்து
அல்லும் பகலும் நினைந்து
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா
என்னை தவிக்க விடலாமா

அன்பை சுமந்து சுமந்து

படம் :பொன்னுமணி (1993)
இசை : இளையராஜா
பாடியவர் : SP பாலசுப்ரமணியம்
வரிகள்: RV உதயகுமார்

2 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சோக ராகம்...

Tirupurtams said...

இப்பாடல் என்ன இராகத்தில் அமைந்துள்ளது ஐயா ?

Last 25 songs posted in Thenkinnam